தனியார் மருத்துவமனையில் நோயாளி தற்கொலை
மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து நோயாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து நோயாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸôர் தரப்பில் கூறப்பட்டதாவது: மந்தைவெளி சோலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபால் (60). பூ வியாபாரியான அவர் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் 6-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவில் அவருக்கு காசநோய் இருப்பதாக மருத்துவர்கள் திங்கள்கிழமை தெரிவித்தனராம்.
Advertisement
இதனைக் கேட்டதில் இருந்து வேணுகோபால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையின் 3-ஆவது மாடிக்கு செவ்வாய்க்கிழமை காலை 7 மணியளவில் சென்ற வேணுகோபால், அங்கிருந்து கீழே குதித்து விட்டாராம்.
இதில், பலத்த காயமடைந்த அவருக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து விசாரித்து வருவதாகப் போலீஸார் தெரிவித்தனர்.