அரசு கிட்டங்கியில் தீ விபத்து
சென்னை புது வண்ணாரப்பேட்டை அரசு கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள சாக்கு பைகள் எரிந்து நாசமானது.
சென்னை புது வண்ணாரப்பேட்டை அரசு கிட்டங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள சாக்கு பைகள் எரிந்து நாசமானது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
புது வண்ணாரப்பேட்டையில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையின் கிட்டங்கி உள்ளது. இந்த கிட்டங்கியில் பழைய சாக்குப் பைகள் வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து புதன்கிழமை காலை புகை வந்துள்ளது. இதைப் பார்த்த ஊழியர்கள், தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
தீயணைப்பு வண்டி வருவதற்குள், அந்த கிட்டங்கியில் உள்ள சாக்கு பைகள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. சம்பவ இடத்துக்கு வந்த 7 தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. சுமார் 5 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள சாக்குப் பைகள் எரிந்து நாசமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து புது வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.