முகப்பு
சென்னை

இளைஞர் வெட்டிக் கொலை

செங்கல்பட்டு மேலமையூர் ஏரியில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

Updated On : 22 ஜூலை 2013, 5:15 am IST
பகிர்:

செங்கல்பட்டு மேலமையூர் ஏரியில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

செங்கல்பட்டை அடுத்த வல்லம் கிராமத்தைச் சேர்ந்த மணியின் மகன் சக்திவேல் (26). இவர் எலக்ட்ரீஷியனாக வேலைப் பார்த்து வந்தார்.

இவர் சனிக்கிழமை வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் மேலையூரில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு தாலுக்கா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

தகவலை அடுத்த போலீஸ் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை செய்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞர் வல்லம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.