FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

காவல் துறை அதிகாரிகள் 56 பேர் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் காவல் துறை அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 15 ஜூன் 2026, 8:40 pm IST
தலைமை செயலகம் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் 56 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி ஈ.எஸ். உமா, சென்னை தலைமையிட டிஐஜியாகவும், தலையிட துணை ஆணையர் கே.எஸ். பால கிருஷ்ணன், சென்னை சைபர் கிரைம் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக கே. முத்துக்குமார், பூக்கடை துணை ஆணையராக ஜி. கோபி, ஆவடி ஆணையரக தலைமையிட டிசியாக வனிதா, சென்னை மெட்ரோ தலைமை பாதுகாப்பு அதிகாரியாக டி. குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

தமிழக கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை அயல்நாடு வாழ் தமிழர் பிரிவி எஸ்பியாக எம். சுதாகர், பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக எஸ். விமலா நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆவடி சட்டம் ஒழுங்கு டிசியாக வினோத் சாந்தாராம், சிறப்புப் படை எஸ்பியாக எஸ். விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற பாதுகாப்பு துணை ஆணையராக எஸ். செல்வராஜ், மத்திய குற்றப் பிரிவு துணை ஆணையராக என். ஸ்டீபன் ஏசுபாதம், சேலம் எஸ்.பியாக எஸ். குத்தலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை எஸ்.பியாக ஏ.சி. கார்த்திகேயன், திருச்சி நகர துணை ஆணையராக ஆர். பொன்கார்த்திக் குமார், தருமபுரி எஸ்.பியாக ஏ.கே. அருண் கபிலன், கோவை நகர துணை ஆணையராக எஸ்.எஸ். மகேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை நகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையராக பி. தங்கதுரை, நாமக்கல் மாவட்ட எஸ்.பி.யாக யாதவ் கிரிஷ் அசோக், சென்னை மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக தீபா சத்யன், மதுரை எஸ்.பி.யாக தேவநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

summary

56 police officers transferred tamilnadu goverment

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments