காவல் துறை அதிகாரிகள் 56 பேர் இடமாற்றம்!
தமிழ்நாட்டில் காவல் துறை அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
தமிழ்நாட்டில் 56 காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி ஈ.எஸ். உமா, சென்னை தலைமையிட டிஐஜியாகவும், தலையிட துணை ஆணையர் கே.எஸ். பால கிருஷ்ணன், சென்னை சைபர் கிரைம் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக கே. முத்துக்குமார், பூக்கடை துணை ஆணையராக ஜி. கோபி, ஆவடி ஆணையரக தலைமையிட டிசியாக வனிதா, சென்னை மெட்ரோ தலைமை பாதுகாப்பு அதிகாரியாக டி. குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
summary