உடல் நலக் குறைவால் மரணம்: ஏழு காவலர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி
உடல் நலக் குறைவால் மரணம் அடைந்த ஏழு காவலர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
உடல் நலக் குறைவால் மரணம் அடைந்த ஏழு காவலர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி காவல் நிலையை தலைமைக் காவலர் முனீஸ்வரன் சாலை விபத்திலும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை முதல் நிலைக் காவலர் டி.ராமதாஸ், சென்னை மாநகர காவல் எஸ்.ஐ.,கள் டி.அருள்தாஸ், எஸ்.மணி, நாகை மாவட்டம் திருவெண்காடு தலைமைக் காவலர் ஆனந்தன், நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் முதல் நிலைக் காவலர் எம். ஷேக் இப்ராஹிம், பெருமாள்புரம் காவல் நிலைய தலைமைக் காவலர் சிவபெருமாள் ஆகியோர் உடல் நலக் குறைவாலும் மரணம் அடைந்தனர்.
அவர்களின் குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
Advertisement