முகப்பு
தமிழ்நாடு

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி: மக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி குறித்து...

Updated On : 15 ஜூன் 2026, 12:16 pm IST
மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் உள்ள கடைக்குள் நுழைந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்திய காட்டு யானை பாகுபலி, - டிஎன்எஸ்
பகிர்:

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-உதகை சாலை பகுதியில் உள்ள கடைக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி, அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் யானை கூட்டங்களோடு சேராமல் தனியாக நடமாடி வரும் கம்பீரத் தோற்றம் கொண்ட காட்டு யானை பாகுபலி, இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி போக்குவரத்து மிகுந்த சாலை மற்றும் குடியிருப்புகள் வழியாக கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் உதககை சாலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை, ஞாயிற்றுக்கிழமை இரவு உதகை சாலையில் உள்ள கடைக்குள் புகுந்து அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்தியது.

Advertisement

Advertisement

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் காட்டு யானை பாகுபலியை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

யானைகளின் வலசைப் பாதையில் வியாபார நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு மற்றும் பொதுமக்களின் இடையூறு காரணமாக யானைகள் தங்களது வழக்கமான வலசை பாதையில் செல்வது தடைபட்டுள்ளதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

summary

Wild elephant Baahubali enters residential area near Mettupalayam; residents fearful

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.