காவல் ஆணையர் அலுவலகம் அருகே பெண் தீ குளிக்க முயற்சி
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே பெண் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே பெண் தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிங்கபெருமாள் கோயில் நேரு நகரைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரி (33). இவர் ஆலந்தூரில் வசிக்கும் தனது உறவினர் குட்டி ராமதாஸ் என்பவருக்கு ரூ. 5 லட்சம் கடன் கொடுத்திருந்தாராம். ராமதாஸ், அந்தப் பணத்தை திருப்பித் தரவில்லையாம்.
இது குறித்து கோட்டீஸ்வரி, காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
Advertisement
இதனால் விரக்தியடைந்த கோடீஸ்வரி வியாழக்கிழமை காலை எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலக வாயிலுக்கு வந்தார்.
அங்கு வாயிலில் போலீஸாரின் கெடுபிடி அதிகம் இருப்பதை பார்த்த கோடீஸ்வரி, ஆணையர் அலுவலகத்திலிருந்து சிறிது தூரம் தள்ளிச் சென்றார்.
பின்னர் தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் மீது ஊற்றினார். இதைப் பார்த்த பொதுமக்களும், அங்கு நின்றுக் கொண்டிருந்த போலீஸாரும் கோடீஸ்வரியை மீட்டு, எழும்பூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.