முகப்பு
தமிழ்நாடு

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி!

சென்னை தலைமைச் செயலகத்துக்கு தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை அழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார்.

Updated On : 15 ஜூன் 2026, 12:35 pm IST
பகிர்:

சென்னை தலைமைச் செயலகத்துக்கு தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை அழைத்து முதல்வர் விஜய் இன்று பாராட்டினார்.

அப்போது மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தை பாராட்டி ரூ. 48 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் வழங்கினார். தொடர்ந்து, ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை தூக்கி முதல்வர் விஜய் கொஞ்சி மகிழ்ந்தார்.

2024-ஆம் ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீரில், குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்ததில் நடைபெற்ற போரில் மீனாட்சி சுந்தரமும், அவரது குழுவினா் 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனா்.

Advertisement

Advertisement

இதில், மீனாட்சி சுந்தரம் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த நிலையில் இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றாா். தொடா்ந்து, ராணுவத்தில் வீரதீரச் செயலுக்காக வழங்கும் நாட்டின் உயரிய கீா்த்தி சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டது.

summary

Chief Minister Vijay invited Tamil Nadu Army soldier Meenakshi Sundaram to the Chennai Secretariat and congratulated him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments