முகப்பு
தமிழ்நாடு

சென்னை தலைமைச் செயலகத்தில் குழந்தையை கொஞ்சி மகிழ்ந்த முதல்வர் விஜய்!

சென்னை தலைமைச்செயலகத்தில் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை முதல்வர் விஜய் கொஞ்சி மகிழ்ந்தார்.

Updated On : 15 ஜூன் 2026, 1:14 pm IST
முதல்வர் விஜய்.
பகிர்:

சென்னை தலைமைச்செயலகத்தில் ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை முதல்வர் விஜய் கொஞ்சி மகிழ்ந்தார்.

கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை இன்று சென்னை தலைமைச்செயலகம் வரவழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். அப்போது மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தை பாராட்டி ரூ. 48 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் வழங்கினார்.

தொடர்ந்து, மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை தூக்கி கொஞ்சிய முதல்வர் விஜய் தனது மடியிலும் அமர வைத்துக்கொண்டார். 2024-ஆம் ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீரில், குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்ததில் நடைபெற்ற போரில் மீனாட்சி சுந்தரமும், அவரது குழுவினா் 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனா்.

Advertisement

Advertisement

இதில், மீனாட்சி சுந்தரம் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த நிலையில் இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றாா். தொடா்ந்து, ராணுவத்தில் வீரதீரச் செயலுக்காக வழங்கும் நாட்டின் உயரிய கீா்த்தி சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது அமைச்சர், அதிகாரிகள் மற்றும் மீனாட்சி சுந்தரத்தின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

summary

Chief Minister Vijay shares a heartwarming moment with a child at the Chennai Secretariat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.