முகப்பு
தமிழ்நாடு

சென்னை தலைமைச் செயலகம் சுற்றி புகைமூட்டம்! மக்கள் சுவாசிக்க சிரமம்!

சென்னை தலைமைச் செயலகம் சுற்றுப்புறத்தில் புகைமூட்டம் ஏற்பட்டிருப்பது பற்றி...

Updated On : 2 ஜூன் 2026, 12:44 pm IST
சென்னை தலைமைச் செயலகம் சுற்றி புகைமூட்டம் - X
பகிர்:

சென்னை தலைமைச் செயலகம் வெளியே திடீர் புகைமூட்டம் நிலவும் நிலையில், அங்கிருக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இன்று காலை 11.30 மணியளவில் திடீர் புகைமூட்டம் நிலவியது. இந்த புகைமூட்டம் காரணமாக மக்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

துறைமுகம் அருகே கடற்கரைப் பகுதியில் இருந்து துர்நாற்றத்துடன் புகைமூட்டம் வரும் நிலையில், வாகன ஓட்டிகளுக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதனிடையே, தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை என்று சென்னை துறைமுகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த சல்ஃபர் ரசாயனம் வெய்யில் காரணமாக புகைமூட்டத்துடன் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் சல்ஃப்ர் வெளியேறுவதை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதையடுத்து புகை வெளியேறுவது நிறுத்தப்பட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

summary

Smoke Engulfs Chennai Secretariat: People Suffer from Breathlessness

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.