FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் கொலை! விசாரணையில் திடீர் திருப்பம்

கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் கொலை வழக்கு விசாரணையில் திடீர் திருப்பம் பற்றி..

Updated On : 15 ஜூன் 2026, 12:39 pm IST
காவல்துறை விசாரணை - பிரதி படம் - File photo
பகிர்:

கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் கொலை வழக்கில், குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குழந்தை பாலியல் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உள்கோட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது.

உடனடியாக இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட குழந்தையும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகளை எந்த ஒரு ஊடகத்திலும் பரப்புவதை மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியைச் சேர்ந்த புதுப்பேட்டை பகுதியல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாடகை வீடுகளில் தங்கி, அங்குள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, படுகாயங்களுடன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை பலியானது.

summary

Gummidipoondi child sexual assault and murder: Sudden twist in the investigation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments