முகப்பு
சென்னை

அரசு மருத்துவமனைகளில் சுத்தப்படுத்தும் பணி

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளை ஆன்மிக தொண்டர்கள் 5 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தூய்மைப் படுத்தினார்கள்.

Updated On : 2 செப்டம்பர், 2013 at 3:26 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளை ஆன்மிக தொண்டர்கள் 5 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தூய்மைப் படுத்தினார்கள்.

சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் மக்கள் நலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த அடிப்படையில் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை, ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனைகளில் தூய்மை பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடந்தன.

Advertisement

சென்னை அரசு மருத்துவமனையில் மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் அன்பழகன் தலைமையில் 5 ஆயிரம் ஆன்மிக தொண்டர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையின் அனைத்து வார்டுகள், படிக்கட்டுகள், தாழ்வாரங்கள், மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் அசுத்தங்களை சுத்தப்படுத்தினர். மருத்துவமனை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வளர்ந்திருந்த தேவையற்ற செடிகள், குப்பைகளையும் அகற்றி தூய்மைப்படுத்தினர்.

சென்னை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கனகசபை இது குறித்து கூறுகையில்,ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 1 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக சுகாதாரக் கேடுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே இது போன்ற சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளுவது என்பது மருத்துவமனை சுகாதாரத்திற்கும்,நோயாளிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.