ரூ.155 கோடி மதிப்பு நில மோசடி வழக்கு: ஓய்வு பெற்ற ஆசிரியர் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.155 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.155 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மேலும் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள செளந்திரபாண்டியன் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றில் வரலாற்று ஆசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவராவார்.
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த எத்திஸ் குப்தா என்பவர், சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அண்மையில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தங்களுடைய அறக்கட்டளைக்குச் சொந்தமான 16 கிரவுண்ட் நிலத்தை அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி உமா மகேஸ்வரி என்பவர் அபகரித்துக் கொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
அந்த நிலம் தற்போது வெங்கட சுவரூப் ரெட்டி என்பவருக்கு உமா மகேஸ்வரி விற்றுவிட்டதாகவும், அதன் மதிப்பு ரூ.155 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நில மோசடிக்கு சுஜய் ஆனந்த், செüந்திர பாண்டியன் என்ற இருவர் உடந்தையாக இருந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் மத்திய குற்றப் பிரிவின் நில மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் உமா மகேஸ்வரி, சுஜய் ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
உமா மகேஸ்வரி மற்றும் சுஜய் ஆனந்த் இருவரையும் போலீஸார் கைது செய்து, நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.
இந்நிலையில், நில அபகரிப்புக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் செüந்திரபாண்டியனை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.