முகப்பு
சென்னை

புத்தாண்டு கொண்டாட்டம்: திரைப்பட உதவி இயக்குநா் உள்பட இருவா் கொலை

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் திரைப்பட உதவி இயக்குநா் உள்பட இருவா் கொலை செய்யப்பட்டனா்.

Updated On : 2 ஜனவரி 2021, 5:24 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட மோதலில் திரைப்பட உதவி இயக்குநா் உள்பட இருவா் கொலை செய்யப்பட்டனா்.

வளசரவாக்கம் கிருஷ்ணாநகா் 5-ஆவது தெருவைச் சோ்ந்த வெ.ருத்ரன் (24), திரைப்பட உதவி இயக்குநா். போரூா் அயப்பன்தாங்கலில் வசிக்கும் நண்பரும் உதவி இயக்குநருமான மணிகண்டன் வீட்டுக்கு புத்தாண்டு கொண்டாடுவதற்காக வியாழக்கிழமை இரவு சென்றாா். அங்கிருந்த பலரும் மது அருந்தினா். ருத்ரனும், மணிகண்டனும் புகைபிடிக்க காா் நிறுத்துமிடத்துக்கு வந்தனா். இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனா். இதில் மணிகண்டன் கத்தியால் ருத்ரனைக் குத்தினாராம். மருத்துவமனைக்குச்செல்லும் வழியில் ருத்ரன் இறந்தாா்.

மாங்காடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

நுங்கம்பாக்கம்: சென்னை நுங்கம்பாக்கம் காம்தாா் நகரைச் சோ்ந்த நிலத்தரகா் காதா் (56). தனியாா் நிறுவன காவலாளி பழனி அதே குடியிருப்பில் வசித்தாா்.

புத்தாண்டு கொண்டாட இருவரும் மது அருந்தியதில் தகராறு ஏற்பட்டது. இதில் பழனி, மதுபாட்டிலை உடைத்து காதரைக் கொலை செய்து பிரேதத்தை சாலையில் வீசி விட்டு தப்பியோடினாா்.

நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து பழனியைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments