முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு மக்கள் ஆதரவு உள்ளது: பிரவீண் சக்ரவர்த்தி கருத்து

திமுகவின் நீண்டகால வாதத்தை மறுத்து, கூட்டணி ஆட்சிக்குத் தமிழக மக்கள் தெளிவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது குறித்து...

Updated On : 29 ஜூன் 2026, 1:27 pm IST
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீண் சக்ரவர்த்தி - Praveen Chakravarty
பகிர்:

சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறையை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்ற திமுகவின் நீண்டகால வாதத்தை மறுத்து, கூட்டணி ஆட்சிக்குத் தமிழக மக்கள் தெளிவான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் பிரவீண் சக்ரவர்த்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சக்ரவர்த்தி, தவெக-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி, வாக்காளர்கள் கூட்டணி அரசுகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளதாகக் கூறினார். "திமுக தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணிக் கட்சிகளுடன் போட்டியிடுவதா என்பது அவர்களின் உள்கட்சி விவகாரம். இருப்பினும், தமிழக மக்கள் கூட்டணி அரசை ஏற்கமாட்டார்கள் என்ற அவர்களின் வாதம் தவறானது என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்.

திமுக தலைவர்கள் மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதை அரசியல் பழிவாங்கல் என்று தான் சொல்வார்கள். கடந்த ஐந்தாண்டு திமுக ஆட்சியை ஏற்க மறுத்து தான் மக்கள் அவர்களை வீட்டில் அமர வைத்து விட்டனர் என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement

மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டதை வரவேற்ற அவர், தமிழ்நாட்டில் ஒரு வலிமையான காங்கிரஸை மீண்டும் உயிர்ப்பித்து, கட்டியெழுப்பும் பிரம்மாண்டமான பொறுப்பு மாணிக்கம் தாகூருக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகள்.

இந்த நடவடிக்கை கட்சிக்குள் புதிய புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், மாணிக்கம் தாகூர் கட்சியை பலப்படுத்துவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுப்பார், மாநிலப் பிரிவுக்குப் புதிய திசையைக் காட்டுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்த

சக்ரவர்த்தி, அவரது தலைமையில், தொண்டர்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதியாகத் தன்னைத் தைரியமாக நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரு புதிய காங்கிரஸை நாம் உருவாக்குவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

தேசிய விவகாரங்கள் குறித்துப் பேசிய சக்ரவர்த்தி, நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ள தொகுதி மறுவரையறை நடவடிக்கை மற்றும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' ஆகிய திட்டங்களை காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கும் என்று கூறினார். இத்தகைய நடவடிக்கைகள் தமிழகத்தின் உரிமைகளைப் பாதிக்கக்கூடும் என்றும், கூட்டாட்சித் தத்துவங்களை வலுவிழக்கச் செய்யக்கூடும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

மாநிலங்களுக்கு இடையிலான விவகாரங்கள் குறித்துப் பேசுகையில், மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் எதிர்க்கிறது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரிடம் கட்சி தனது நிலைப்பாட்டை நேரடியாகத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட சக்ரவர்த்தி, ஒரு தேசியக் கட்சியாக காங்கிரஸ் இத்தகைய சிக்கல்களை அரசியல் ரீதியாகத் தீர்ப்பதில் ஆக்கபூர்வமான பங்கை ஆற்ற முடியும் என்று கூறினார்.

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடு குறித்துக் குறிப்பிட்ட சக்ரவர்த்தி, அந்த நிர்வாகம் பதவியேற்று ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ளதால், அவர்கள் செயல்படுவதற்குப் போதுமான அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும், லட்சம் குறைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த அந்த அரசு ஏற்கனவே மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாடு போன்ற முக்கிய விவகாரங்களில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும், ஆட்சியில் இருக்கிறோம், கூட்டணியில் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

summary

Rajya Sabha MP Praveen Chakravarty on Sunday asserted that the people of Tamil Nadu have shown clear support for coalition governance...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments