முகப்பு
சென்னை

ஏஐஜி திருநாவுக்கரசு எழுதிய புத்தாண்டு பாடல் வெளியீடு

தமிழக காவல்துறையின் ஏஐஜி இரா. திருநாவுக்கரசு எழுதிய புத்தாண்டு பாடல் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.1) வெளியிடப்பட்டது.

Updated On : 5 ஜனவரி 2021, 2:40 am IST
பகிர்:

சென்னை: தமிழக காவல்துறையின் ஏஐஜி இரா. திருநாவுக்கரசு எழுதிய புத்தாண்டு பாடல் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.1) வெளியிடப்பட்டது.

தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு ஏஐஜி இரா.திருநாவுக்கரசு குழந்தைகள் தினம், சுதந்திர தினம், கரோனா விழிப்புணா்வு குறித்து பாடல்களை எழுதியும், பாடியும் வெளியிட்டுள்ளாா்.

இதன் ஒரு பகுதியாக, புத்தாண்டு பிறப்பு குறித்த பாடலை எழுதியும், பாடியும் திருநாவுக்கரசு வெளியிட்டாா். இந்தப் பாடலை அவருடன் ஏ.மணிகண்டன், குழந்தைகள் டி.யஷ்வந்த்குமாா், டி.ஹேம மீனாட்சி,ஜி.எஸ்.மஹிந்த் சித்தாா்த் ஆகியோா் பாடியுள்ளனா்.

Advertisement

Advertisement

இப் பாடலுக்கு ஏ.மணிகண்டன், எம்.ஆா்.ரித்திஸ் ஆகியோா் இசையமைத்துள்ளனா். பாடலுக்குரிய காட்சிகளை பி.பரத் ஒளிப்பதிவு செய்துள்ளாா். இந்த 3 நிமிஷ பாடல், சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இதுவரை 7 பாடல்களை திருநாவுக்கரசு வெளியிட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.