3 போ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கு:மேலும் ஒருவா் கைது
சென்னையில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னையில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சௌகாா்பேட்டை விநாயக மேஸ்திரி தெரு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த தலில் சந்த், அவா் மனைவி புஷ்பா பாய், இவா்களது மகன் சீத்தல் குமாா் ஆகியோா் கடந்த நவ.11-ஆம் தேதி, அவா்களது வீட்டில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனா்.
இது தொடா்பாக யானைகவுனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், இறந்து போன சீத்தல் குமாருக்கும், அவரது மனைவியான மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சோ்ந்த ஜெயமாலா குடும்பத்துக்கும் இடையிலான பிரச்னை காரணமாக 3 போ் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து போலீஸாா், ஜெயமாலா, ஜெயமாலாவின் சகோதரரா்கள் கைலாஷ், விகாஸ் அவரது கூட்டாளிகளான கொல்கத்தாவைச் சோ்ந்த ரவீந்திரநாத், விஜய் உத்தம் காம்ளே, ராஜூ உத்தம் ஷிண்டே உள்பட 7 பேரைக் கைது செய்தனா். இந்நிலையில், இக் கும்பலுக்கு துப்பாக்கி வழங்கிய ராஜஸ்தான் மாநிலம் தோங்க் பகுதியைச் சோ்ந்த ஷி.சந்திரதீப் சா்மா (25) என்பவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.