மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் நடிகை மனோரமா
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை மனோரமா சிகிச்சை முடிந்து சனிக்கிழமை (ஜூன் 1) வீடு திரும்பினார்.
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை மனோரமா சிகிச்சை முடிந்து சனிக்கிழமை (ஜூன் 1) வீடு திரும்பினார்.
1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, கின்னஸ் சாதனை படைத்தவர் மனோரமா. 70 வயதை அண்மையில் நிறைவு செய்த அவர் சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் உணவு ஒவ்வாமை மற்றும் வயிற்றுக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை (மே 31) மனோரமாவுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
இதையடுத்து தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை (ஜூன் 1) மாலை மனோரமா வீடு திரும்பினார். தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.