சுந்தர்.சி இயக்கும் அரண்மனை படத்தில் மூன்று நாயகிகள்
இதுவரை தனது படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த சுந்தர்.சி தற்போது முதன் முறையாக வேறொரு களத்தை கையில் எடுத்திருக்கிறார்.
சுந்தர்.சி இயக்கும் அரண்மனை படத்தில் நாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தீயா வேலை செய்யணும் குமாரு வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கும் திரைப்படம் அரண்மனை. இந்தப் படத்தை அவரே இயக்கி நடிக்கிறார். படத்தின் இன்னொரு நாயகனாக வினய்யும் நடிக்கிறார். நாயகிகளாக லட்சுமிராய், ஆண்ட்ரியா, ஹன்சிகா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இதில் ஹன்சிகா நடிப்பது மட்டும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் தனது டுவிட்டர் செய்தியின் மூலம், அரண்மனையில் நடிப்பதை ஹன்சிகா உறுதி செய்துள்ளார். ரஜினியின் சந்திரமுகி படத்தை போன்று இப்படமும் ஆவி படமாக உருவாகவிருக்கிறது.
Advertisement
Advertisement
இதுவரை தனது படங்களில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த சுந்தர்.சி தற்போது முதன் முறையாக வேறொரு களத்தை கையில் எடுத்திருக்கிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.