செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் கவிஞர் சிவ கார்த்திகேயன் ஆகிறார்!

சினேகா

தற்போது கோலிவுட்டை கலக்கும் செய்தி இதுதான். நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள `கோலமாவு கோகிலா' படத்தில் கல்யாண வயசு எனத் தொடங்கும் ஒரு பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான இது, பாடல் மே 17- ம் தேதி வெளியாக உள்ளது.

`கோலமாவு கோகிலா' படத்தில் ஜாக்குலின் நயன்தாராவுக்குத் தங்கையாக நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோகோ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்தப்படத்திற்கு அனிருத் இசைமைத்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. முதல் பாடலான ‘எதுவரையோ...’ என்ற விடியோ, கடந்த மார்ச் 8-ம் தேதி வெளியானது. விவேக் மற்றும் கெளதம் மேனன் இணைந்து இப்பாடலை எழுதினார்கள். பாடியவர் ஷான் ரோல்டன், இடையிடையே வரும் வசனங்களை கெளதம் மேனன் பேசியிருந்தார்.

இந்நிலையில் இரண்டாவது பாடலை எழுத சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்பளித்துள்ளார் அனிருத். இருவரும் அமர்ந்து பாடல் வரிகளை பற்றி கலந்தாலோசிப்பது போன்ற ஒரு விடியோவை அனிருத் தன் முகநூலில் அண்மையில் வெளியிட்டார்.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்தியேனின் அடுத்த படத்தில் நயன்தாராவுடன் இரண்டாம் முறையாக இணைகிறார். தற்போது நயன்தாராவுக்காக ஒரு பாடலை எழுதியிருப்பது மகிழ்ச்சி என கூறியிருக்கிறார் சிவா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT