'எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்றார்கள்' - முதன்முறையாக மனம் திறக்கும் சமந்தா
விவாகரத்து தொடர்பான வதந்திகள் குறித்து முதன்முறையாக நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
விவாகரத்து தொடர்பான வதந்திகள் குறித்து முதன்முறையாக நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவும், சமந்தாவும் கடந்த வாரம் பிரியவுள்ளதாக அறிவித்தனர். இதனையடுத்து இருவரது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.
சமந்தா வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது, அவர் குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதிக்கவில்லை என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதேப் போல் நாக சைதன்யாவும் வேறு நடிகைகளுடன் தொடர்பு ஏற்பட்டதன் காரணமாகவே இருவருக்குள்ளும் பிரச்னை துவங்கியதாக ஒரு வதந்தி பரவியது. ஆனால் இருவரும் மேற்சொன்ன வதந்திகளுக்கு பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் நடிகை சமந்தா முதன்முறையாக தனது விவாகரத்து குறித்து தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக மனம் திறந்து பேசியுள்ளார். அதில், ''என்னைப் பற்றிய உங்களது உணர்வுப்பூர்வமான அக்கறை என்னை வியப்படையச் செய்துள்ளது.
இதையும் படிக்க | சமந்தா - நாகசைதன்யா விலகலுக்கு இவையெல்லாம்தான் காரணங்களா?
என்னைப் பற்றிய தவறான செய்திகள், கதைகள் பரவிய போது நீங்கள் என் மீது காட்டிய அக்கறைக்கும், ஆதரவுக்கும் நன்றி. எனக்கு வேறு ஒருவருடன் தொடர்பு என்றார்கள், குழந்தை பெற்றுக்கொள்ள நான் சம்மதிக்கவில்லை என்றார்கள். சந்தர்ப்பவாதி என்றார்கள். இப்பொழுது நான் கர்ப்பத்தை கலைத்துவிட்டதாக கூறுகிறார்கள்.
விவாகரத்து என்பது வலி நிறைந்தது. என்னை அதில் இருந்து தனியாக மீண்டு வர அனுமதியுங்கள். ஒன்று சொல்லிக்கொள்கிறேன். எந்தவிதமான வதந்திகளும் என்னை காயப்படுத்த முடியாது'' என்று கூறியுள்ளார்.