முகப்பு
செய்திகள்

’இந்தியன் - 2’ கதை இப்படித்தான் இருக்கும்: ஜெயமோகன்

இந்தியன் 2 படத்தின் கதை குறித்து பேசியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

Updated On : 15 டிசம்பர் 2022, 12:46 pm IST
பகிர்:

இந்தியன் 2 படத்தின் கதை குறித்து பேசியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

Advertisement

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு பிகாரில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல் ஒன்றில் “இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் பட்டினி கிடந்து நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் கதை சுதந்திரத்திற்கு முன்பான காலகட்டத்திலும் நடக்கிறது. அதாவது, இந்தியன் திரைப்படம் அப்பாவுக்கும் மகனுக்குமான கதை. இந்தியன்-2 சேனாதிபதிக்கும் அவருடைய அப்பாவுக்கும் இடையான கதையாகவும் உருவாகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments