முகப்பு
செய்திகள்

இந்த வாரம்முதல் ‘குக் வித் கோமாளி’: பழைய கோமாளிகள் பங்கேற்பார்களா?

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி இந்த வாரம்முதல் ஒளிபரப்பாகவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 23 ஜனவரி 2023, 12:23 pm IST
பகிர்:

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி இந்த வாரம்முதல் ஒளிபரப்பாகவுள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்வு குக் வித் கோமாளி. மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது நான்காவது சீசன் ஒளிப்பரப்பாகவுள்ளது. சமையல் போட்டியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பப்படுவதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 போட்டி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் சனிக்கிழமை(ஜன.28) முதல் குக் வித் கோமாளி போட்டி ஒளிபரப்பபடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்படவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களை போலவே சமையல் கலைஞர்கள் தாமு, வெங்கடேஷ் பட் நடுவர்களாக பங்கேற்கின்றனர். ரக்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிகிறார்.

இந்நிலையில், கடந்த சீசன்களில் கோமாளியாக பங்கேற்று மக்களின் மனதை கவர்ந்த பாலா, புகழ், சிவாங்கி ஆகியோர் தற்போது திரைப்பட வாய்ப்பு கிடைத்து பிஸியாக நடித்து வருவதால் அவர்கள் மூவரும் பங்கேற்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும், புதிய கோமாளிகளாக பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து, ஓட்டேரி சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா, சின்னத்திரை நடிகை ரவீனா தாகா ஆகியோர் கலந்து கொள்வது உறுதியாகியுள்ளது. பழைய கோமாளிகள் சுனிதா, மணிமேகலை உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

குக்குகளாக தொகுப்பாளினி அர்ச்சனா, பிக் பாஸ் தாமரை உள்ளிட்டோர் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோமாளிகளால் கடந்த மூன்று சீசன்களால் வெற்றி பெற்ற ‘குக் வித் கோமாளி’ பழைய கோமாளிகளின் பங்கேற்பு இல்லாமல் இந்த முறை வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments