முகப்பு
செய்திகள்

மாளவிகாவை ‘க்யூட்’டாக புகைப்படமெடுத்த நடிகர் விக்ரம்! 

தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் எடுத்த மாளவிகாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Updated On : 13 மார்ச் 2023, 4:20 pm IST
பகிர்:

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தின் தலைப்பு அறிமுக விடியோ அக்டோபர் 23இல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு தங்கலான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை இந்தப் படம் பேசுவதாக கூறப்படுகிறது. டீசரிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெறும் கதை என டீசர் மூலம் நமக்கு தெரிய வருகிறது. 

சமீபத்தில் தங்கலான் படத்தில் மாளவிகா சரியாக நடிக்கவில்லை என வதந்தி வெளியானது. பின்னர் மாளவிகா சிலம்பம் பயிற்சி எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்க்க முடிந்தது. சமீபத்தில் கடலோரத்தில் பாறையின் மீதிருந்து சிலம்பம் சுற்றும் விடியோவை வெளியிட்டிருந்தார். 

Advertisement

Advertisement

இந்நிலையில் தங்கலான் படத்தின் படப்பிடிப்பின் ஓய்வு நேரத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தினை மாளவிகா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தினை நடிகர் விக்ரம் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ட்விட்டரில் நடிகர் விக்ரம் தங்கலான் படப்பிடிப்பிலிருந்து அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வருவார். 

மாளவிகா இதனை தனது சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்து, “பாம்புகள், ஏணிகள் மற்றும் நிழல்கள். படப்பிடிப்பில் இருந்து ஒருநாள் ஓய்வு கிடைக்கும்போது நம்முடன் ஒரு அசாத்தியமான புகைப்பட கலைஞர் இருந்தால்..” என நடிகர் விக்ரமை டேக் செய்து பதிவிட்டுள்ளார். 

ஏற்கனவே ஒரு நேர்காணலில் நடிகை பார்வதி தங்கலான் படத்தில் நடிப்பதற்கு கடினமாக இருந்ததாக தெரிவித்திருந்தார். இதனால் படம் சிறப்பாக வருமென ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments