முகப்பு
செய்திகள்

அரண்மனை - 5 பணிகளில் சுந்தர். சி?

அரண்மனை - 5 அப்டேட்...

Updated On : 19 அக்டோபர், 2024 at 11:53 AM
இயக்குநர் சுந்தர். சி
பகிர்:

அரண்மனை படத்தின் 5 பாகப் பணிகளில் இயக்குநர் சுந்தர். சி ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரண்மனை - 4 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிப்படமானதுடன், ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

முதல் மூன்று பாகங்களுக்குக் கிடைத்ததைவிட அதிக வரவேற்பு இப்படத்திற்குக் கிடைத்ததால், அடுத்ததாக இதன் 5 ஆம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் சுந்தர். சி இருப்பதாகத் தகவல் வெளியானது.

இதற்கிடையே, மூக்குத்தி அம்மன் - 2 படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அரண்மனை - 5 படத்திற்கான முன்தயாரிப்புப் பணிகளில் சுந்தர். சி ஈடுபட்டுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பரில் துவங்கும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இப்படத்தை அடுத்தாண்டு கோடை வெளியீடாகக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →