900-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகும் கேப்டன் மில்லர்!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் இதுவரை அல்லாத அளவுக்கு வெளிநாடுகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
ராக்கி, சாணிக் காயிதம் படங்களின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். 17 வருடங்களாகப் போராடி தமிழ் சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர்.
தற்போது நடிகர் தனுஷை வைத்து கேப்டன் மில்லர் படத்தினை இயக்கி இருக்கிறார். இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, முக்கிய வேடத்தில் சந்தீப் கிஷன் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: மாற்றத்துக்காக பயப்படாதீர்கள்: அமலா பால் பகிர்ந்த புதிய விடியோ!
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
வெளிநாடுகளில் லைகா புரடக்ஷன்ஸ் இந்தப் படத்தினை வெளியிடுகிறது.
இந்நிலையில் உலக அளவில் 900-க்கும் அதிகமான திரைகளில் வெளியாக இருக்கிறது. இதுதான் தனுஷ் படங்களில் பிரமாண்ட ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நாளைய நாயகிகள்! இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அசத்தும் பெண்கள்!
மிகப்பெரிய சினிமா வெற்றியினைப் படைக்க சர்வதேச அளவில் களம் அமைந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது.