முகப்பு
செய்திகள்

கடலுக்கு அடியில் வெளியிடப்பட்ட திரௌபதி - 2 முதல் பார்வை!

திரௌபதி - 2 திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டது குறித்து...

Updated On : 27 ஆகஸ்ட் 2025, 6:51 pm IST
படத்தின் போஸ்டர்...
பகிர்:

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகும், திரௌபதி - 2 திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் கடலுக்கு அடியில் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் மோகன் ஜி மற்றும் நடிகர் ரிச்சர்ட் ரிஷி ஆகியோரது கூட்டணியில் உருவாகி, கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பேசுபொருளான திரைப்படம், “திரௌபதி”.

இந்தத் திரைப்படத்தின், 2-வது பாகமான ”திரௌபதி - 2”, நேதாஜி ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜி.எம். பிலிம் கார்பரேஷன் தயாரிப்பில், வரலாற்று கதைகளத்துடன் கூடிய படமாக உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்தத் திரைப்படத்தின் முதல்பார்வை போஸ்டரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படக்குழுவினர், இன்று (ஆக.27) கடலுக்கு அடியில் வெளியிட்டுள்ளனர். அதன், விடியோ பதிவானது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, அந்தப் பதிவில் இயக்குநர் மோகன் ஜி கூறியிருப்பதாவது:

“மீண்டும் திரெளபதியின் மிரட்டல் ஆரம்பம். தென்னகத்தை ஆண்ட ஹொய்சாள பேரரசன் மூன்றாம் வீர வல்லாளர் மற்றும் சேந்தமங்கலத்தை ஆண்ட காடவராயர்களின் வீரம், தியாகம், ஆகியவற்றுடன் வலி நிறைந்த இரத்த சரித்திரம்” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், நடிகர்கள் நட்டி நாகராஜ், வொய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: நடிகரானார் டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்!

summary

The first look poster of the film Draupadi - 2, directed by Mohan G, has been released by the film crew under the sea.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments