பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? மறுக்கிறார் மகன்!
கே.ஜே. யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு அவரது மகன் மறுப்பு...
பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் (வயது 85) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான செய்தியை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார்.
வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக வியாழக்கிழமை காலை தகவல்கள் பரவின.
இந்த நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு தகவல் தெரிவித்த விஜய் யேசுதாஸ், அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க : பஞ்சாப்: அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி மொழிப் பாடம் கட்டாயம்!
இந்திய இசை உலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தனது குரலால் ரசிகா்களை வசீகரித்து வருபவர் கா்நாடக இசைக் கலைஞரும், பின்னணி பாடகருமான யேசுதாஸ்.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட பல மொழிகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை யேசுதாஸ் பாடியுள்ளார்.
இவர் தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பலதலைமுறை நடிகர்களுக்காக 700-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
மத்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளும் 8 தேசிய விருதுகளும் அவர் வென்றுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.