முகப்பு
செய்திகள்

புனிதா தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

புனிதா தொடரில் இருந்து அமுதா பாத்திரத்தில் நடித்து வந்தவர் மாற்றப்பட்டுள்ளார்.

Updated On : 18 செப்டம்பர் 2025, 2:54 pm IST
நடிகை நிமிஷா ராதாகிருஷ்ணன்.
பகிர்:

புனிதா தொடரில் இருந்து அமுதா பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை புவனா, அந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே டிஆர்பியில் முன்னணியில் உள்ளன. அந்தவகையில், தொடர்கள் விறுவிறுப்புடனும், வித்தியமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வருகின்றன.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிமேஷிகா ராதாகிருஷ்ணன். ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்த இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்து சின்ன திரைக்குள் நுழைந்தார்.

Advertisement

Advertisement

நடிகை நிமேஷிகா, கண்ணான கண்ணே தொடரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புனிதா என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார்.

சோனியா விக்ரம்

அம்மா மற்றும் வளர்ப்பு மகள் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை பிரதானப்படுத்தி புனிதா தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தத் தொடரில் அமுதா பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை புவ்னா விலகிய நிலையில், இனி வரும் எபிசோடுகளில் அருவி தொடரில் நடித்து பிரபலமான நடிகை சோனியா விக்ரம் நடிக்கவுள்ளார்.

புனிதா தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The actress who played the role of Amudha from the series Punitha has left the series.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments