நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியத் திரையுலகில் மிகவும் விருப்பத்துக்குரிய நடிகையான த்ரிஷா, நடிகர் சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் கடந்த 2002 ஆம் ஆண்டு அறிமுகமானார்.
கடந்த 24 ஆண்டுகளில் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக தமிழ்த் திரையுலகில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழின் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்த வெகுசில நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர்.
Advertisement
சமீப ஆண்டுகளில் விஜய்யின் லியோ (2023) , தக் லைப் (2025), விடாமுயற்சி (2025), குட் பேட் அக்லி (2025) படங்களில் நடித்திருந்தார்.
விரைவில் வெளியாகவுள்ள சூர்யாவின் கருப்பு திரைப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார். சமீபத்தில், நடிகர் விஜய் உடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டதற்காக இவர்மீது விமர்சனங்கள் எழுந்து சர்ச்சையானது.
இந்த நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள த்ரிஷா வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
வெடிகுண்டு சோதனை செய்யும் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் அங்கு சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரிய வந்துள்ளது.