கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
பிரசாந்த் - ஹரி திரைப்படம் குறித்து...
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்க இருந்த திரைப்படம் கைவிடப்பட்டதாம்.
நடிகர் பிரசாந்த் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்தகன், தி கோட் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அந்தகன் திரைப்படம் ஹிந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் தமிழில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
தற்போது, தெலுங்கில் வெற்றிபெற்ற கோர்ட் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார். படத்திற்கு ரஞ்சன் எனப் பெயரிட்டுள்ளனர்.
Advertisement
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஹரியுடன் பிரசாந்த் இணையும் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், இப்படத்திற்காக ஹரிக்கு கொடுத்த முன்பணத்தைப் பெற்றுத் தருமாறு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குநரும் பிரசாந்த்டின் தந்தையுமான தியாகராஜன் புகார் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், இக்கூட்டணி திரைப்படம் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது. இயக்குநர் ஹரியின் முதல் படமான ‘தமிழ்’ திரைப்படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் மீண்டும் இணைய இருந்தது குறிப்பிடத்தக்கது.