மீண்டும் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மோகன்லால்!
மோகன்லாலின் புதிய திரைப்படம் குறித்து...
நடிகர் மோகன்லால் இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார்.
நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் ஹிருதயப்பூர்வம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அப்படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று ரூ. 80 கோடி வரை வசூலித்தது.
மலையாள சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான சத்யன் தொடச்சியாக அடுத்தடுத்த படங்களை இயக்கக்கூடியவர் என்பதால் ஹிருதயப்பூர்வம் படத்தைத் தொடர்ந்து யாரை இயக்குவார் என்கிற கேள்வி இருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் மோகன்லால் மீண்டும் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 10 ஆம் தேதி துவங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Actor Mohanlal is set to act once again under the direction of Sathyan Anthikad.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.