மும்பைக்குக் குடியேறும் அல்லு அர்ஜுன்?
நடிகர் அல்லு அர்ஜுன் மும்பைக்குக் குடியேற உள்ளதாகத் தகவல்...
நடிகர் அல்லு அர்ஜுன் மும்பைக்குக் குடியேற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதாரண தெலுங்கு நடிகராக இருந்த அல்லு அர்ஜுன் புஷ்பா வெற்றியால் பான் இந்திய ஸ்டாரானதுடன் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் மாறியுள்ளார். அட்லியுடனான படத்தில் ரூ. 400 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படமும் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. அண்மையில், ஹைதராபாத்தில் அல்லு சினிமாஸ் என்கிற பெயரில் மிகப்பெரிய திரையரங்கத்தையும் கட்டினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் தன் குடும்பத்தினருடன் மும்பைக்குக் குடியேற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அட்லி இயக்கத்தில் நடிக்கும் ராக்கா படத்தின் படப்பிடிப்பு முழுமையாக மும்பையிலேயே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.