அகண்டா இயக்குநருடன் இணையும் கார்த்தி?
கார்த்தியின் புதிய படத் தகவல் குறித்து...
நடிகர் கார்த்தி தெலுங்கு இயக்குநரிடம் கதை கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக வெளியான வா வாத்தியார் திரைப்படம் கடும் விமர்சனங்களைச் சந்தித்து தோல்விப்படமானது. அடுத்ததாக, இவர் நடித்து முடித்த சர்தார் - 2 திரைப்படம் ஜூலை வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இயக்குநர் தமிழ் இயக்கத்தில் மார்ஷல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
Advertisement
இந்த நிலையில், தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெற்றி பெற்ற அகண்டா திரைப்படத்தின் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு நடிகர் கார்த்திக்கு கதை கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கார்த்தி அடுத்ததாக நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.