சும்மா தெறிக்குது... கருப்பைப் பாராட்டிய கார்த்தி!
கருப்பு திரைப்படத்தைப் பாராட்டிய கார்த்தி...
நடிகர் கார்த்தி சூர்யாவின் கருப்பு திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பல மாதக் காத்திருப்புக்குப் பின் வெளியானதால் சூர்யா ரசிகர்கள் பலரும் முதல்நாள் முதல்காட்சியைப் பார்க்க முன்பதிவு செய்திருந்தனர்.
படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதால் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் கார்த்தி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கருப்பா... இதுக்கு மேல என்ன வேணும்? சும்மா தெறிக்குது. அன்பான ரசிகர்களே போடு வெடியை..” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “திரையரங்கம் முழுமையாக சிதறுவதுடன் சூர்யா சாரின் கடவுள் அவதாரம் நெருப்பாக இருக்கிறது. படக்குழுவினர் மாஸ் ஆக்சன் குடும்ப பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்துள்ளனர். தற்போது, அந்த ஒருவரை (சூர்யா) எதுவும் தடுக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
Actor Karthi has praised Surya's film Karuppu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.