முகப்பு
செய்திகள்

சும்மா தெறிக்குது... கருப்பைப் பாராட்டிய கார்த்தி!

கருப்பு திரைப்படத்தைப் பாராட்டிய கார்த்தி...

நடிகர்கள் சூர்யா, கார்த்தி
பகிர்:

நடிகர் கார்த்தி சூர்யாவின் கருப்பு திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பல மாதக் காத்திருப்புக்குப் பின் வெளியானதால் சூர்யா ரசிகர்கள் பலரும் முதல்நாள் முதல்காட்சியைப் பார்க்க முன்பதிவு செய்திருந்தனர்.

படமும் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதால் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் கார்த்தி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கருப்பா... இதுக்கு மேல என்ன வேணும்? சும்மா தெறிக்குது. அன்பான ரசிகர்களே போடு வெடியை..” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், “திரையரங்கம் முழுமையாக சிதறுவதுடன் சூர்யா சாரின் கடவுள் அவதாரம் நெருப்பாக இருக்கிறது. படக்குழுவினர் மாஸ் ஆக்சன் குடும்ப பிளாக்பஸ்டர் படத்தைக் கொடுத்துள்ளனர். தற்போது, அந்த ஒருவரை (சூர்யா) எதுவும் தடுக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

Actor Karthi has praised Surya's film Karuppu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.