ஓடிடியில் வெளியானது சிறை!
நடிகர் விக்ரம் பிரபுவின் சிறை படம் ஓடிடியில் வெளியானது.
நடிகர் விக்ரம் பிரபுவின் சிறை திரைப்படம் ஓடிடியில் வெளியானது.
2025 ஆம் ஆண்டின் இறுதியில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எல்.கே. அக்ஷய் குமார் நடிப்பில் திரைக்கு வந்த சிறை திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகும் வெற்றிப் படமானது.
காதல் கதைக்குப் பின் காவல்துறை அதிகார பின்னணியை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்துக்கு கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், சிறை திரைப்படம், இன்று(ஜன. 23) ஜீ5 ஓடிடியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
summary