எப்ப வருமோ... புலம்பிய ஆர்.ஜே. பாலாஜி!
கருப்பு வெளியீடு குறித்து ஆர்.ஜே. பாலாஜி...
இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தன் கருப்பு திரைப்படம் குறித்து பேசியது வைரலாகியுள்ளது.
இயக்குநர் ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் இன்னும் வெளியீடு காணாமல் இருக்கிறது.
காரணமாக, இன்னும் இப்படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகின. கருப்பு திரைப்படத்தை ஏப்ரல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இப்படம் குறித்து அண்மையில் ஆர்ஜே பாலாஜி பேசியபோது, “கருப்பு திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. தேர்தல் முடிந்ததும் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவருக்குமான திரைப்படமாகவே இது உருவாகியுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால், நேற்று (மார்ச் 8) நடைபெற்ற இந்தியா - நியூஸிலாந்து டி20 இறுதிப்போட்டியை வர்ணனை செய்துகொண்டிருந்தபோது, “ரச்சின் ரவிந்திராவே சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து ரிலீஸ் ஆகிவிட்டார். நான் எடுத்தது எப்போது ரிலீஸ் ஆகுமோ” என புலம்பலாக சொன்னார்.
இதனால், கருப்பு திரைப்படம் குறித்து ஆர். ஜே. பாலாஜிக்கே என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை என சூர்யா ரசிகர்கள் வருத்தமாக பதிவிட்டு வருகின்றனர்.
director rj balaji spokes about his directorial movie karuppu release
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.