முகப்பு
செய்திகள்

என் சினிமா வாழ்க்கையை அழிக்க சிலர் முயன்றனர்: கௌதம் மேனன்

துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீடு குறித்து கௌதம் மேனன் கூறியிருப்பதாவது...

கௌதம் மேனன். - படம்: இன்ஸ்டா / கௌதம் வாசுதேவ் மேனன்.
பகிர்:

துருவ நட்சத்திரம் படத்தின் வெளியீடு குறித்து கௌதம் மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில், “என்னையும் என் சினிமா வாழ்க்கையையும் அழிக்க சிலர் முயன்றனர்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் உருவாகி, நிதி பிரச்னையின் காரணமாக 8 ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்னும் திரையரங்கில் வெளியாகாமல் இருக்கிறது.

துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடு தொடர்பாக தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப். 30 அன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ’துருவ நட்சத்திரம்' படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்துள்ளார்.

Advertisement

இந்த நிலையில், இது குறித்து கௌதம் மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சிலர் என் சினிமா வாழ்க்கையை அழிக்கவும் என் படம் வெளியாவதை தடுக்கவும் முயற்சித்தார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்தப் படத்தில் வேலை செய்துள்ளார்கள்.

இன்னொரு மனிதனர், என்னுடைய சீனியர் வழக்குரைஞர் அப்துல் ஹமீது எனக்காக முன்னின்று போராடினார். இதற்கடுத்து முக்கியமான மனிதர் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இருண்ட சுரங்கப் பாதையின் இறுதியில் வெளிச்சமாக எனக்குப் பாதை அமைத்துக்கொடுத்துள்ளார்.

துருவ நட்சத்திரம் படம் வெளியாக வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளார். நிதிப் பிரச்னையினால் வெளியாகாமல் இருக்கும் எந்த ஒரு படத்துக்கும் இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல்லாக இருக்கும். இனிமேல் நல்லதே நடக்கும் எனக் கூறியுள்ளார்.

summary

Some people tried to destroy me and my film career: Gautham Menon Dhruva Natchathiram release.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.