இளம் வயதில் புது வீடு கட்டி குடியேறிய சின்ன திரை நடிகை!
சின்ன திரையில் அறிமுகமான ஓராண்டுக்குள் நடிகை பரமேஸ்வரி ரெட்டி புதிய வீடு கட்டியுள்ளது குறித்து...
சின்ன திரை நடிகை பரமேஸ்வரி ரெட்டி புதிய வீடு கட்டி குடியேறியுள்ளார். வீட்டிற்கான புதுமனை புகுவிழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் சின்ன திரையில் அறிமுகமாகி ஓராண்டுக்குள் பரமேஸ்வரி, புதிய வீடு கட்டியுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2025 ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில் மனசெல்லாம் தொடர் ஒளிபரப்பானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் 238 நாள்களில் நிறைவடைந்தது பெரும் ஏமாற்றமே.
Advertisement
Advertisement
இரண்டு ஜோடிகளின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் தொடரில் பரமேஸ்வரி ரெட்டி நந்தினி என்ற பாத்திரத்தில் நாயகியாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக தீபக் நடித்திருந்தார். மற்றொரு ஜோடியாக வெண்பா, ஜெய்பாலா நடித்திருந்தனர்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த தொடர்களில் அதிக டிஆர்பி பெற்ற தொடராக மனசெல்லாம் இருந்த நிலையில், திடீரென முடிக்கப்பட்டது.
இத்தொடருக்குப் பிறகு தனிப் பாடல்களில் பரமேஸ்வரி நடித்து வருகிறார். இதற்கு முன்பு தெலுங்கு மொழியில் ஒளிபரபான நம்பர் ஒன் கோடாலு என்ற தொடரில் துணைப் பாத்திரத்தில் பரமேஸ்வரி நடித்திருந்தார்.
இந்நிலையில் இவர் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் குடியேறியுள்ளார். சமீபத்தில் புதுமனை புகுவிழா நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ் சின்ன திரையில் ஓராண்டு மட்டுமே நடித்திருந்த நிலையில், சொந்தமாக வீடு கட்டும் அளவுக்கு பரமேஸ்வரி ரெட்டி உயர்ந்துள்ளதாக ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
கனவை நோக்கி உழைக்கும் பெண்கள், பொருளாதார ரீதியாகவும் தன்னிறைவடைய முடியும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக பரமேஸ்வரி ரெட்டி மாறியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Manasellam Serial Actress Parameswari reddy new house warming viral photos
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.