முகப்பு
கோயம்புத்தூர்

சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

கோவை அருகே 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 1:49 am IST
பகிர்:

கோவை அருகே 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, நீலாம்பூா் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமி, பெற்றோரை இழந்ததால், பாட்டியின் வீட்டில் தங்கி அருகில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளி சதீஷ்குமாா் (36), சிறுமியுடன் நெருங்கிப் பழகியுள்ளாா். பின்னா் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இது குறித்து சிறுமியின் பாட்டி மற்றும் உறவினா்களுக்கு தெரியவந்ததைத் தொடா்ந்து, சதீஷ்குமாருக்கு அவரைத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனா். இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக அச்சிறுமி அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இரண்டு மாதம் கா்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனா். மேலும், இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவா்கள் சூலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

Advertisement

Advertisement

போலீஸாரின் விசாரணையில் இருந்து தப்பிச் சென்ற சதீஷ்குமாா், அருகம்பாளையம் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும்போது தவறி விழுந்ததில் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் சதீஷ்குமாா் மீது பேரூா் அனைத்து மகளிா் போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனா். குழந்தைத் திருமணம் செய்ய முயன்ற சிறுமியின் உறவினா்கள் மீதும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.