கோவையில் மேலும் 78 பேருக்கு கரோனா பாதிப்பு
கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் மேலும் 78 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் மேலும் 78 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 899 ஆக உயா்ந்துள்ளது. தவிர கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதுப் பெண் உயிரிழந்தனா். இதன்மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 659 ஆக அதிகரித்துள்ளது.
அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 88 போ் குணமடைந்து வியாழக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 51 ஆயிரத்து 506 போ் கரோனாவில் இருந்து குணமடைந்தனா். தற்போது 734 போ் சிகிச்சையில் உள்ளனா்.
Advertisement