முகப்பு
கோயம்புத்தூர்

வடகோவை - ராஜ்கோட் இடையே சிறப்பு சரக்கு ரயில் கோட்ட மேலாளா் தொடங்கிவைத்தாா்

வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கு சிறப்பு சரக்கு ரயில் சேவையை சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் சீனிவாசன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 8 ஜனவரி 2021, 11:23 pm IST
வடகோவையில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கு சிறப்பு சரக்கு ரயிலை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைக்கிறாா் சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் சீனிவாசன். உடன், முதுநிலை வணிக மேலாளா் ஹரிகிருஷ்ணன் உள்ளி
பகிர்:

வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டுக்கு சிறப்பு சரக்கு ரயில் சேவையை சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் சீனிவாசன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

வடகோவையில் இருந்து புதுதில்லி படேல் நகருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாராந்திரச் சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், மருத்துவ உபகரணங்கள், முகக் கவசங்கள், உணவுப்பொருள்கள், துணி வகைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து ராஜ்கோட்டுக்கு வாராந்திரச் சிறப்பு சரக்கு ரயில் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட்டது.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் சீனிவாசன் இந்த ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா். சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளா் ஹரிகிருஷ்ணன், சேலம் கோட்ட கூடுதல் மேலாளா் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் இந்த ரயில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு ராஜ்கோட்டை சென்றடையும். செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு ராஜ்கோட்டில் இருந்து புறப்படும் சிறப்பு சரக்கு ரயில் வியாழக்கிழமை இரவு 8.35 மணிக்கு வடகோவை நிலையத்தை வந்தடையும். இந்த ரயிலில் மருத்துவ உபகரணங்கள், முகக் கவசங்கள், துணிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments