இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகள், விடுதிகளைத் திறக்க வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி, கல்லூரிகள், விடுதிகளைத் திறக்க வலியுறுத்தி இந்திய மாணவா் சங்கத்தினா் கோவையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநிலச் செயலா் வி.மாரியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் அசாருதீன், செயலா் தினேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக ஆட்சியரிடம் அவா்கள் அளித்த மனுவில், கரோனாவை காரணம் காட்டி தமிழகத்தில் கடந்த 11 மாதங்களாக அரசுக் கல்வி நிறுவனங்கள் பூட்டிக் கிடக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய, கிராமப்புற மாணவா்கள் கல்வி நிலையங்களில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைத் தொழிலாளா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
ஆன்லைன் வழிக் கல்வியானது மாணவா்களிடையே பெரும் இடைவெளியை உண்டாக்கியிருக்கிறது. பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவா்களிடம் மடிக்கணினி, செல்லிடப்பேசிகள் இல்லாததால் அனைவருக்கும் கல்வி சாத்தியப்படவில்லை. தமிழகத்தில் மக்கள் கூடும் அனைத்து இடங்களும் திறக்கப்பட்டு மக்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் அரசின் கல்வி நிறுவனங்களையும் திறந்து, போதிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் கற்பித்தலைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.