இருஜோடி கண்கள் தானம்
சிதம்பரம் கீழரத வீதியைச் சேர்ந்த ஆர்.நாகலட்சுமி அம்மாள் (73), தஞ்சை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த பி.வி.சுப்புலட்சுமி (74) ஆகியோர் கடந்த
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM
சிதம்பரம் கீழரத வீதியைச் சேர்ந்த ஆர்.நாகலட்சுமி அம்மாள் (73), தஞ்சை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த பி.வி.சுப்புலட்சுமி (74) ஆகியோர் கடந்த சனிக்கிழமை காலமானார்கள்.
மேற்கண்ட இருவரது கண்கள் சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம் சார்பில் தானமாகப் பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், அரிமா சங்க மண்டலத் தலைவர் ராசி பெரி.முருகப்பன், நெய்வேலி மனிதநேய மேம்பாட்டு மைய நிறுவனர் கே.சி.தம்பி, ஆசைதம்பி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
Advertisement