ஆயத்த ஆடைப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்
கடலூரில் ஆயத்த ஆடைப் பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கடலூரில் ஆயத்த ஆடைப் பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
÷இந்தியன் வங்கி சார்பில் நடைபெறும் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 23 பெண்களுக்கு தையல் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிலில் 3 வாரக்கால பயிற்சி வழங்கப்பட்டது.
÷இப்பயிற்சியில் சுப்ரமணியபுரம், வசந்தராயன்பாளையம், புலவனூர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து 23 பேர் பங்கேற்றனர்.
Advertisement
÷இதில், வணிக நிறுவனங்களின் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டது.
÷இப்பயிற்சியின் நிறைவு விழாவில், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் மணிமாறன், பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
÷மாவட்ட முன்னோடி மேலாளர் சேதுராமன், பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.