முகப்பு
கடலூர்

ஆயத்த ஆடைப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்

கடலூரில் ஆயத்த ஆடைப் பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 11:09 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:18 PM

கடலூரில் ஆயத்த ஆடைப் பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

÷இந்தியன் வங்கி சார்பில் நடைபெறும் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில் 23 பெண்களுக்கு தையல் மற்றும் ஆயத்த ஆடை தயாரிப்புத் தொழிலில் 3 வாரக்கால பயிற்சி வழங்கப்பட்டது.

÷இப்பயிற்சியில் சுப்ரமணியபுரம், வசந்தராயன்பாளையம், புலவனூர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து 23 பேர் பங்கேற்றனர்.

Advertisement

÷இதில், வணிக நிறுவனங்களின் பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டது.

÷இப்பயிற்சியின் நிறைவு விழாவில், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் மணிமாறன், பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

÷மாவட்ட முன்னோடி மேலாளர் சேதுராமன், பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.