விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கடலூரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக
விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு கடலூரில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
÷விநாயகர் சதூர்த்தி விழா, வரும் செப்டம்பர் 9-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
÷இதனை முன்னிட்டு கடலூரில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
Advertisement
÷இதில், கடலூர் முதுநகரில் காகிதக் கூழ் மூலமாக விநாயகர் சிலைகள் செய்யும் பணி, கடந்த ஒரு மாதக்காலமாக நடைபெற்று வருகிறது.
÷இங்கு 3 அடி முதல் 7 அடி உயரம் வரை உள்ள சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
÷விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உருவம் கொடுக்கப்பட்ட சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகளும் துரிதமாக நடைபெறுகிறது.
÷இது குறித்து சிலை தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சரவணன் கூறியதாவது:
÷வழக்கமாக ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையில் விநாயகர் சிலை விற்பனை தொடங்கிவிடும். அதன் பிறகு நாளுக்கு நாள் விற்பனை அதிகரிக்கும்.
÷விநாயகர் சதுர்த்துக்கு முதல் நாள் வரை விற்பனை இருக்கும். இந்த ஆண்டில் விற்பனை குறைவாகவே உள்ளது. ரூ.1,000 முதல் ரூ.12,000 வரை விலையுள்ள சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.