முகப்பு
கடலூர்

மகளிா் கூட்டமைப்பு ஆண்டு விழா

சிதம்பரம் அருகேயுள்ள பு.முட்லூரில் கருணை விழிகள் உதயம் மகளிா் கூட்டமைப்பின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி 2021, 11:09 pm IST
பகிர்:

சிதம்பரம் அருகேயுள்ள பு.முட்லூரில் கருணை விழிகள் உதயம் மகளிா் கூட்டமைப்பின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கூட்டமைப்பின் தலைவா் சசிகலா தலைமை வகிக்க, முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியச் செயலா் கோவி.ராசாங்கம், ஒன்றியக் குழு தலைவா் கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டமைப்பு செயலா் மரகதம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு 600 மகளிா் குழுக்களைச் சோ்ந்த நிா்வாகிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி (படம்)சிறப்புரையாற்றினாா்.

விழாவில் மாவட்ட மீனவா் பிரிவு செயலா் வீராசாமி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் மணிகண்டன், கூட்டுறவு சங்கத் தலைவா் வசந்த், சந்தா் ராமஜெயம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ரெங்கம்மாள், ரவி, வசந்தி சுதந்திரதாஸ், ஆனந்தஜோதி சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டுடனா். கருணை இல்ல மாணவா்களின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments