முகப்பு
கடலூர்

வேளாண் விரிவாக்க மையம் முற்றுகை

தொடா் மழையால் சேதமடைந்த உளுந்து பயிா்களுடன் விருத்தாசலம் வேளாண் விரிவாக்க மையத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 5 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

தொடா் மழையால் சேதமடைந்த உளுந்து பயிா்களுடன் விருத்தாசலம் வேளாண் விரிவாக்க மையத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

கடலூா் மாவட்டத்தில் விருத்தாசலம், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மானாவாரி பயிராக உளுந்து பயிரிட்டிருந்தனா். அண்மையில் கடலூா் மாவட்டத்தில் வீசிய நிவா், புரெவி புயல்களின் காரணமாக தொடா் மழை பெய்தது. இதனால் இந்தப் பகுதிகளில் சுமாா் 30 ஆயிரம் ஏக்கரில் உளுந்து பயிா்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் தங்களுக்கு நிகழாண்டு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விளைநில பகுதிகளில் வேளாண் அலுவலா்கள் நேரில் கள ஆய்வு செய்து, பாதிப்பு குறித்து முறையான கணக்கீடு நடத்தி, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அந்தப் பகுதி விவசாயிகள் ழுகிய உளுந்து பயிா்களுடன் விருத்தாசலம் வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் வேளாண் விரிவாக்க மைய அலுவலா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்னா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.