ஒரு ரூபாய்க்கு பேருந்து, ரயில், மெட்ரோவில் ஒருமுறை பயணிக்கலாம்! சென்னை ஒன் ஆஃபர்!
சென்னை ஒன் செயலியின் மூலமாக ஒரு ரூபாய் டிக்கெட்டில் பேருந்து, ரயில், மெட்ரோவில் ஒருமுறை பயணம் செய்யும் ஆஃபர் பற்றி...
சென்னை ஒன் செயலியின் மூலமாக ஒரு ரூபாய் டிக்கெட்டில் பேருந்து, ரயில், மெட்ரோ ஆகியவற்றில் ஒருமுறை மட்டும் பயணிக்கும் ஆஃபர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து மற்றும் எண்மப் பரிவா்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகரப் பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகா் ரயில்களில் பயணிக்கும் வகையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம்(CUMTA) சாா்பில் ‘சென்னை ஒன்’ என்ற செயலி அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தச் செயலியில் ரூ. 1,000 மற்றும் ரூ. 2,000-க்கான சில்வா் மற்றும் கோல்டு ஆகிய மாதந்திர பயண அட்டைகளை இணைதளம் மூலமாகவே பெறும் வசதியும் நடைமுறையில் இருந்து வருகிறது. சென்னை ஒன் செயலியை லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் சென்னை ஒன் செயலியில் ஒரு ரூபாய் டிக்கெட்டில் பேருந்து, ரயில், மெட்ரோ ஆகியவற்றில் ஒரு முறை மட்டும் பயணிக்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ரூபாய் டிக்கெட் பெறுவது எப்படி?
சென்னை ஒன் செயலியில் உங்கள் பயணத்தைத் தேர்ந்தெடுத்து, கட்டணம் செலுத்தும் பகுதிக்குச் செல்லவும்.
கட்டணம் செலுத்தும் பக்கத்தில் உள்ள ரூ. 1 டிக்கெட் சலுகையை (Rs 1 Ticket Offer) தேர்ந்தெடுக்கவும்.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் (CUMTA) யுபிஐ அமைப்பை நிறைவு செய்து, ரூ. 1 மட்டும் செலுத்தினால் நீங்கள் பயணிக்கலாம்.
அதுமட்டுமல்ல, இந்த ரூ. 1 டிக்கெட் சலுகைக்குப் பிறகு, இந்த யுபிஐ -யைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கும் அடுத்த 6 டிக்கெட்டுகளுக்கும் 20% தள்ளுபடி பெறலாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.