சென்னை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் குதித்த பயணி! சேவை பாதிப்பு!
சென்னை மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் பயணி குதித்தது பற்றி...
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் பயணி ஒருவர் குதித்ததால் ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்வேவின் பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை இடையே ஈக்காட்டுத்தாங்கல் ரயில் நிலையம் அமைந்துள்ளது.
கிண்டி தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல் தொழில்நுட்பப் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று பிற்பகல் 1.34 மணியளவில், ஈக்காட்டுத்தாங்கல் ரயில் நிலையத்துக்குள் மெட்ரோ ரயில் நுழையும்போது, நடைமேடையில் இருந்த பயணி ஒருவர் தண்டவாளத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை மீட்ட ரயில் நிலைய ஊழியர்கள், அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேற்சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனால், சென்னை மெட்ரோ பச்சை வழித்தடத்தில் சுமார் 10 நிமிடங்கள் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும், பின்னர், நிலைமை சீரானதாகவும் மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
Commuter jumps onto Chennai Metro tracks - Services disrupted
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.